
எச்சரிக்கை: குடி குடியைக் கெடுக்கும். (இது ஒரு சிலேடை) இந்தப் பதிவைப் படிப்பது நேரத்தைக் கெடுக்கும். எச்சரிக்கை பண்ணிட்டேன் இனி உங்கள் பாடு.
தலைப்பை வைத்துத் தப்பாப் புரிஞ்சுக்காதீங்க. தம்பி வேற எதையோ சொல்லப்போறான். இல்ல கொல்லப்போறான்.
எதோ செஞ்சுட்டுப் போட்டும் விடுடா.
டேய் நான் கேட்ட கேள்விக்குப் பதிலச் சொல்லுடா.
என்னடா கேட்ட?
அட கருமம் பிடிச்சவன மொத வரியப் படிடா.
அதுவா கவித்துவமா எழுதுறதா நினைச்சு உளறி வச்சிருக்க.
அட எரும அது தலைப்புடா அதையாடா வாசிக்கச் சொன்னேன் கூறுகெட்டவனே நானே திருப்பியும் கேட்குறேன். எவண்டா கண்டுபிடிச்சான் இந்தக் கருமத்த?
டேய் கொல்லாதடா நீதானடா கேக்குற நீதாண்டா பதிலையும் சொல்லணும்.
ஏன் நீ சொல்லு... இல்ல அவனச் சொல்லச் சொல்லு.
எவன எவனும் இங்க இல்ல. நீயே சொல்லு.
அது தாண்டா கல்யாணத்த...
என்ன பெரிய புனிதம் புண்ணாக்கு.
ஒருதருக்கு ஒருத்தரு ஆறுதலா வாழ்க்கையின் கடைசி வரைக்கும் ஒரு மாரல் சப்போர்ட்டா...
ஏய் ஸ்டாப். இந்த வெங்காயம் எல்லாம் வேண்டாம். காசு கொடுத்து பொம்பளைட்ட போனா போலீஸு புடிச்சிக்கும். ஆனா எல்லாருமா சேர்ந்து ஒரே வீட்டுக்குள்ள ஆம்பளையும் பொம்பளையும் அடைச்சு வப்பாங்க. ஹால்ல யார் இருந்தாலும் கவலைப்படாம பெட்ரூம்ல கூத்தடிக்கலாம். அது தான.
டேய் இந்த மாதிரில்லாம் பேசி பேசி வீணாப் போயிராத. இதெல்லாம் நாங்க புதுமைப்பித்தனிலேயே படிச்சிட்டோம். ஒழுங்கா காலகாலத்துல கல்யாணம் பண்ணாட்டி வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வராது. மனசுக்குப் பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்து பாரு அப்ப புரியும் ஒனக்கு. ஒனக்கு ஒண்ணுனா அவ துடிப்பா. உம்மேல பாசத்தக் கொட்டுவா.
அதுலயே போட்டு மூடிடுவாடா பேமாணி. பாசமாம் மாரல் சப்போர்ட்டாம். டேய் இப்படித்தாண்டா நெறையப் பேரு மண்ணாப்போயிருக்கான். நீ சொல்ற மாதிரி பாசம் பந்தம் நட்பு உறவு எல்லா எழவும் வெறும் கால்குலேஷன் தானடா? அதத் தாண்டி ஒன்னும் இல்லடா. அது உனக்குப் புரியல. காதல் கல்யாணம் பொண்டாட்டி புள்ள குடும்பம் அது இது எல்லாமே உன்னோட சந்தோஷத்தைக் குழி தோண்டிப் பொதச்சிரும்டா. ஆனா ராஸ்கல்ஸ் ரொம்ப ப்ளான் பண்ணி இத கட்டமைச்சிருக்கானுகடா. கல்யாணம் பண்ணிய உடனே எல்லாரும் ஒட்டுமொத்தமா அதுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பிச்சிட்றீங்களே.
பெற்றோர்களுக்கு இது தானடா சந்தோஷம்.
அப்ப கல்யாணம் பண்ணிட்டா பெற்றோர்களோட எல்லாப் பிரச்சினையும் தீந்திருமா?
அப்படி இல்லடா அவங்களுக்குன்னு ஒரு கடமை இருக்குல்லா. அத அவங்க நிறைவேத்தாட்டி அவங்க மனசு எவ்வளவு சங்கடப்படும் அதயும் நெனச்சிப்பாருடா.
இவ்வளவு பேசுறிய கல்யாணமே பண்ணாம இப்ப நீ என்ன பெரிய சந்தோஷத்தக் கண்டுட்ட.
மச்சான் கோவப்படாதடா கல்யாணம் பண்ணின நீயும் நானும் ஒரே பார்ல தானடா சரக்க மாஞ்சு மாஞ்சு ஊத்திட்டிருக்கோம். பெரிய காந்தி பேரன் மாதிரி போதிக்கிற.
டேய் இதுக்கெல்லாம் எதுக்குடா காந்தி பேர இழுக்குற அவரு மகான்.
ஓஹோ. அப்ப 23வயசுலய நாட்டுக்காக செத்த பகத்சிங் உடம்புரீதியான பிரச்சினைகளோட கடைசிவரை நாட்டுக்காக போராடின நேதாஜி இவங்கலாம் மகான் இல்லயா. நல்லவனா இருக்கிறதவிட நல்லவனா காட்டிக்கிட்றது முக்கியம் இல்லையா?
டேய் நான் என்ன சொன்னா நீ எப்படிப் புரிஞ்சுக்கிற... உனக்கு ஓவரா ஆயிட்டு. வா கிளம்புவோம்.
சரி மாப்ள தெளிவாவே கேட்கிறேன். எனக்கு கல்யாணம் ஆகல மாரல் சப்போர்ட்டுக்கு யாரும் இல்ல நான் தண்ணியடிச்சா அதுல ஒரு நியாயம் இருக்கு. உனக்கு அழகான பொண்டாட்டி புள்ள எல்லாமே இருக்கத்தானடா செய்யுது பொறகு ஏண்டா நீயும் இங்க வந்து கூத்தடிக்கிற.
கல்யாணத்துல பிரச்சினை இருக்குங்குறதுக்காக எல்லாரும் உன்னமாதிரியே வெட்டி நியாயம் பேசிக்கிட்டே இருக்க முடியாது. நீ ஒரு கோழை. குடும்ப பாரத்த தூக்க உனக்குத் தெம்பில்ல, எதையெதையோ போட்டு கொழப்பிக்கிற...
நல்லாத்தான்யா நியாயப்படுத்துறாங்க. அகம்பாவம் கொண்டவருக்கு கொஞ்சம் அதிகம்தான் இந்தச் சலம்பல். சாபம் பலிக்கட்டும்.
பதிலளிநீக்குகல்யாணம் செய்வதன் பலன்கள்:
பதிலளிநீக்கு1. அதிகாரம் செலுத்தவொரு ஆள் கிடைக்கும்.
2. அன்பு செலுத்தவொரு ஆள் கிடைக்கும்.
3. சாதித்துவிட்ட திருப்தி கிடைக்கும் – குழந்தைகள்தான்
4. படுத்துட்டா பார்த்துக்க குடும்பம் கூடவரும்.
5. நிறைய பொறுப்புகள் இருப்பதால் சிந்திக்க நேரம் கிடைக்காது.
6. சிந்திக்க நேரம் கிடைக்காவிட்டால் பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லையென்று நம்பிக் கொண்டு இருக்கலாம்.
7. என்ன செய்தாவது எவனைச் சேர்ந்தாவது சொத்து சேர்ப்பதை நியாயப்படுத்த ஒரு காரணம் கிடைக்கும்.
இப்படி நிறைய இருக்குங்க…
நன்றி! எச்சரிக்கையையும் மீறிப் படித்து அக்கறையோடு கருத்து வெளியிட்டதற்கு.
பதிலளிநீக்கு