இந்த வலைப்பதிவில் தேடு

இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 11, 2020

சின்னத்திரையல்ல, சின்னதிரை


சின்னத்திரை என்றே பெரும்பாலானோர் எழுதுகிறார்கள். நாளிதழ்களும் அப்படியே குறிப்பிடுகின்றன. ஆனால், சின்னதிரை என்றுதானே எழுத வேண்டும்? பெயரெச்சத்தில் ஒற்று மிகாது என்பது விதி அல்லவா? சின்னத்திரை என்று எழுதினால் சின்னம்+திரை என்று ஆகிவிடும். ஆனால், சிறிய திரை என்பதைக் குறிப்பிடவே சின்ன திரை என எழுதுகிறோம். ஆகவே, இதை ஒன்று இல்லாமல் தான் எழுத வேண்டும். அதுதான் முறை.

பொதுவாகத் தமிழ்த் திரைப்படங்கள்மீது தமிழர்களுக்கு ஆர்வம் உள்ள அளவுக்கு மரியாதை கிடையாது. ஆனால், அப்படியான துறையில்கூட, சின்னதம்பி, பெரியதம்பி, சின்னதம்பி பெரியதம்பி எனத் திரைப்படங்களின் தலைப்புகள்கூட, ஒற்றின்றிச் சரியாகத்தாம் அமைந்திருந்தன. எனும்போது, அறிவுவழங்குவதாகக் கருதிக்கொள்ளும் நாளிதழ்களும் பத்திரிகைகளும் தமிழை முறையாக எழுத வேண்டாமா?


பலரும் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். என்றாலும் பிழையே தொடர்வது பிழைதானே?

ஞாயிறு, செப்டம்பர் 06, 2020

அஃறிணை உயர்திணை வேறுபாடு தெரியுமா?

"சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியர்களே"

இன்றைய நாளிதழ் ஒன்றில் மேற்கண்ட தலைப்பு இடம்பெற்றிருந்தது. 

இந்தத் தலைப்பு கீழ்க்காணும் வகையில் அமைந்திருந்தால் அது சிறப்பு:

"சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குபவர் ஆசிரியரே"

இரண்டு தலைப்புகளுக்கும் என்ன வேறுபாடு? நாளிதழின் தலைப்பில் ஆசிரியரை அஃறிணை ஆக்கியிருக்கிறார்கள்; ஆனால், ஆசிரியர் உயர்திணை. 

சனி, செப்டம்பர் 05, 2020

இடஒதுக்கீடா, இட ஒதுக்கீடா?


தமிழில் மெய்யெழுத்து எப்படிச் சொல்லுக்கு முதலில் இடம்பெறாதோ அப்படி உயிரெழுத்து சொல்லுக்கு இடையில் இடம்பெறாது. ஆகவே, மறு ஆய்வு, இட ஒதுக்கீடு என்று இந்தச் சொற்களைப் பிரித்துதான் எழுத வேண்டும்.

மறுஆய்வு, இடஒதுக்கீடு என்று சேர்த்து எழுதுதல் பிழை.
வரஇல்லை என்று எழுதுகிறோமா? வரவில்லை என்றுதான் எழுதுவோம். அதேபோல் மறு ஆய்வு என்பதை ஒரே சொல்லாக எழுத வேண்டுமெனில் மறுவாய்வு என எழுதலாம். இட ஒதுக்கீடு என்னும் சொல்லை, இடவொதுக்கீடு என எழுதலாம். இவற்றைப் பள்ளியில் உடம்படுமெய் எனப் படித்திருக்கிறோம். ஆனால், பயன்படுத்துவதுதான் இல்லை.
ஆசிரியர்களை நினைவுகூருவதுடன் அன்னைத் தமிழையும் நினைவுகூரலாம். மொழிதான் அறிவுபெறுவதற்கான அடிப்படைக் கருவி. கருவி காப்போம்! அறிவு சேர்ப்போம்!

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்