உலர்ந்த உதடுகளால்
ஒத்தடம் போல்
புறங்கையில் முத்திடுவாள்
ஆச்சி
நெகிழ்ச்சிமிகு தருணங்களில்
ஆவிசேர்த்தணைத்து
திலகமாய்
நெற்றியில் முத்துவாள்
அம்மா
உற்சாகப் பொழுதுகளில்
வார்த்தைகள் வலுவிழக்க
இறுக்கியணைத்து
உதடு குவிப்பர்
நண்பர்கள்
யாருமறியாமல்
சூடான சுவாசம் கலந்து
இதழெட்டும் இடங்களில்
ஊற்றி மகிழ்வாள் முத்தத்தை
அந்த அக்கா
இவையெல்லாம்
இறகுகளாய் மிதக்க
நெஞ்சை அழுத்துவதோ
அவள் தராமல்போன
ஒற்றை முத்தம்
(அடப்பைத்தியக்காரா நீயெல்லாம் திருந்தவே மாட்டியாடா)
என்ன செல்லப்பா,
பதிலளிநீக்குபின்னுறீங்களே கவிதைல.
இது செவ்வாய் தோஸம் இல்லை. செல்லப்பா தோஸம்.