இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜனவரி 31, 2010

செவ்வாய் தோஷம்

சுருங்கிய தோல் படிந்த முகத்தின்
உலர்ந்த உதடுகளால்
ஒத்தடம் போல்
புறங்கையில் முத்திடுவாள்
ஆச்சி

நெகிழ்ச்சிமிகு தருணங்களில்
ஆவிசேர்த்தணைத்து
திலகமாய்
நெற்றியில் முத்துவாள்
அம்மா

உற்சாகப் பொழுதுகளில்
வார்த்தைகள் வலுவிழக்க
இறுக்கியணைத்து
உதடு குவிப்பர்
நண்பர்கள்

யாருமறியாமல்
சூடான சுவாசம் கலந்து
இதழெட்டும் இடங்களில்
ஊற்றி மகிழ்வாள் முத்தத்தை
அந்த அக்கா

இவையெல்லாம்
இறகுகளாய் மிதக்க
நெஞ்சை அழுத்துவதோ
அவள் தராமல்போன
ஒற்றை முத்தம்

(அடப்பைத்தியக்காரா நீயெல்லாம் திருந்தவே மாட்டியாடா)

1 கருத்து:

  1. கவிதா நல்லதம்பி8 மார்ச், 2010 அன்று 11:50 AM

    என்ன செல்லப்பா,

    பின்னுறீங்களே கவிதைல.
    இது செவ்வாய் தோஸம் இல்லை. செல்லப்பா தோஸம்.

    பதிலளிநீக்கு

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்