இந்த வலைப்பதிவில் தேடு

சனி, அக்டோபர் 01, 2011

பெய்கிறது மழை



மழை பெய்வதற்கு வாய்ப்பற்ற நிலத்தில்
வசிப்பிடம்
அமையப்பெற்றவன்
தாவரங்களில் மிதந்தலையும் ஈரத்தின் வாசனை
நாசியைத் துளைக்கும் கனவுகளில்
வெம்மையைக் கரைத்திட முயல்வான்

சாளரத்தின் வழியே
வானத்தில் கருமேகங்கள் திரளாதா
என
அவதானிப்பதைப் போன்ற கண்கள் அவனுக்கு

மழைத்துளியின் ஈரம் நிலத்திலிருந்து அகலவே அகலாத
தொலைதூர நகரமொன்றிற்குப் புறப்படும்
அவனது எத்தனிப்புகள்
முறியடிக்கப்பட்டுவிடுகின்றன

அவனது வறண்ட நிலத்தை நோக்கி
வந்த மழைத்துளிகளில் நனையத் தலைப்பட்டவன்
கரத்தினில் திணிக்கப்பட்ட கருங்குடை
அன்பால் நெய்யப்பட்டு
அக்கறையால் பிணைக்கப்பட்டிருந்தது
அதன் வளைந்த கைப்பிடிக்குள் அகப்பட்டுக்கொண்ட
நனைதலின் வேட்கை
உப்பாய்க் கரைந்தது

அந்தச் சிறு பறவை
ஈர இறகுகளோடு பறந்தது

எல்லோரையும் நனைக்கும் பொருட்டு மழை தொடர்ந்து பெய்கிறது

1 கருத்து:

  1. மிகச் சிறப்பாக, மிக அழகாக ​சொல்லிவிட்டீர்கள். ​நொய்​மை தீர திருமண ஏற்பாட்டிற்குள் ​செல்வதுபற்றி சிந்தியுங்கள். "கருமேகங்கள் திரளாதா" என்ற வரிகள் அ​தையும்தான் குறிக்கிற​தோ?

    பதிலளிநீக்கு

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்