இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஜனவரி 26, 2021

கராத்தே மாஸ்டரா, புரோட்டா மாஸ்டரா?

ஜனவரி 11, காலை 9:19 

உண்மையான மாஸ்டருக்காக நாடு காத்துக்கிடக்கிறது. ரசிகர்களோ மாஸ்டரைப் பார்க்கப் பரிதவிக்கிறார்களே எனப் பெரியவர்கள் ஆதங்கம் கொள்கிறார்கள். இதே பெரியவர்கள் எம்ஜிஆரின் படத்தை ரத்ததானம் செய்து பார்த்திருக்கிறார்கள். வியாழக் கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் ஐந்து ரூபாய்க்காகத் தங்கள் உதிரத்தைத் தானம் செய்து, எம்ஜிஆரின் படத்தைப் பார்த்தவர்கள் ரசிகர்கள் என்று சதானந்த் மேனன் சொல்வதை மறந்துவிடலாகாது. (இணைப்பு முதல் கமெண்டில்) எம்ஜிஆர் போட்ட விதை விஜய்வரை வளர்ந்து நிற்கிறது. தாத்தா எம்ஜிஆரைப் போற்றினார், மகன் ரஜினியைத் துதித்தான் பேரன் விஜய் எனக் கிறங்குகிறான். சீரழிவுக்கான வெதய எம்ஜிஆர் போட்டார் என்பதை எப்படி மறக்க முடியும்?

***

ஜனவரி 11 காலை 11:35

என்னை அரசியலுக்கு அழைக்காதீர்கள் என அவரே அறவழிப் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடுவார்கள் போல.

***

ஜனவரி 11 காலை 11:40

இன்றைய அறிக்கையைப் பார்த்தபோது, குஜராத் கலவரத்தின்போது, கும்பிட்ட கைகளுடன் வெளியான அந்தப் புகைப்படம் நினைவில் எழுந்தது.

***

ஜனவரி 11 நண்பகல் 12:01

முதலமைச்சர் ஆவார் என்றெல்லாம் சொன்னாங்க... போற போக்கப் பாத்தா ஓட்டுப்போடக்கூட வர மாட்டாரு போல...

🙏

ஜனவரி 13, காலை 9:42 

சிஸ்டத்தப் பாத்துட்டு மண்ணுமாதிரி உக்காந்து இருக்காத... சாயந்தரம் வர நேரமாகும் சப்பாத்திக்கு மாவு பெசஞ்சு வையி... என்று உரிமையுடன் வையும்போதுதான் அந்தத் தாய் ஒரு தங்கை என்பதை அவன் உணர்வான்.

***
ஜனவரி 13 பகல் 2:17

நெனச்சது கராத்தே மாஸ்டர்
கெடச்சது பரோட்டா மாஸ்டர்

🙏

ஜனவரி 14 நண்பகல் 10:29

1986, பொங்கல். அப்போது அவன் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தான். அந்தப் பொங்கலுக்கு ரஜினி நடித்த மிஸ்டர் பாரத் வெளியானது. அந்தப் பொங்கலுக்கான வாழ்த்தட்டைகளில் வெள்ளையுடையில் ரஜினி கோல்ஃப் மட்டையுடன் நிற்கும் காட்சிகள் ஆதிக்கம் செலுத்தின. அஞ்சலட்டைபோல் இருக்கும் அது. அட்டையின் முன்பக்கத்தில் ரஜினியின் ஸ்டில் இடம்பெற்றிருக்கும். பின்பக்கத்தில், அகலவாக்கில் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் அட்டையில் இடப் புறம் பொங்கல் வாழ்த்தும் வலப் புறம் முகவரி எழுதுவதற்கான இடமும் இடம்பெற்றிருக்கும். அந்த வாழ்த்தட்டைகளில் ஒன்றை வாங்கி, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு அவன் அனுப்பினான். ரஜினிக்கும் ராஜீவுக்கும் என்ன தொடர்பு? யார் இந்த ஐடியாவை அவனுக்குத் தந்தது? போன்றவற்றை 35 ஆண்டுகளுக்குப் பிறகு யோசித்துக்கொண்டிருக்கிறான்.


அந்தப் படத்தின் வில்லனாக நடிக்க முதலில் செந்தாமரை தேர்வு செய்யப்பட்டிருந்ததாகவும் ஆனால், ரஜினி விரும்பி அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த சத்யராஜை, (தன்னைவிட வயது குறைந்த சத்யராஜைத் தனக்குத் தந்தையாக நடிக்கவைத்து மகிழ்ந்திருப்பார் ரஜினி காந்த்.) வில்லனாகப் போடும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வந்தன. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் படத்தில் ரஜினியை சத்யராஜ் ஓவர் டேக் செய்துவிட்டார் என்பதைப் பெரியவர்கள் அப்போது சொன்னதைக் கேட்டபோது, வருத்தமாக இருந்தது. இந்தப் பொங்கலுக்கு வெளியான மாஸ்டரில் பவானிதானே தனித்துத் தெரிகிறான்?

🙏

ஜனவரி 15 இரவு 10:17

நண்பர் ஒருவர் பேசினார். உன்னிடம் நேரம் நிறைய இருக்கிறது என்னும் ஆணவத்தில் அதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு ஆடம்பரமாகச் செலவழிக்கிறாய். நேரம் போனால் திரும்ப வராது. உன்னைப் பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டார்.
அவரது உணர்வை அவன் புரிந்துகொண்டான் அல்லது அப்படி நினைத்துக்கொண்டான்.
உன் மன அமைதிதான் முக்கியம் என்று நினைத்தால் எனது நட்பை முறித்துவிடு. உனக்கும் நல்லது எனக்கும் நல்லது என்றான் அவன்.
எனக்கும் நல்லது என்னும் சொற்கள் தன்னைச் சங்கடப்படுத்தியது என்று சொன்ன நண்பர் சட்டென்று சென்றுவிட்டார். அவனுக்கும் சங்கடமாகத்தான் இருந்தது.
நல்லதுக்குத்தான் நண்பர் சொல்கிறார். அவர் நல்லதுக்காக அவன் எதுவுமே சொன்னதில்லை. அவர் வாழ்வை அவர் வாழ்கிறார் என்று இருந்துவிடுகிறான். அப்படியிருக்கும்போது, நண்பர் விரும்பும் வாழ்வை அவன் வாழ வேண்டும் என ஏன் அவர் ஆசைப்பட வேண்டும், இப்படி அவதியுற வேண்டும்?

🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்